Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டணி பற்றி இனி அதிமுகவிடம் கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

பிப்ரவரி 12, 2021 12:17

சென்னை: தேமுதிகவின் கொடி நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள்.

அதிமுகவிடம் கேளுங்கள்.கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை. தேமுதிக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வரும். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என்று பிரேமலதா கூறினார்.

தலைப்புச்செய்திகள்